பஞ்சமரபு
பஞ்சமரபு (ஐந்தொகை) வெண்பாக்களால் அமைந்த ஓர் இசைத்தமிழ் நூல். சேறை அறிவனாரால் இயற்றப்பட்டது. பழந்தமிழ் இசை மற்றும் நாட்டிய/நாடக இலக்கண நூல். சிலப்பதிகாரத்தின் உரைகளில் இந்நூலின் பல பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. பஞ்சமரபு இசை, வாக்கியம், தாளம், நிருத்தம், அவிநயம் ஆகிய ஐந்து பொருள்களின் மரபைக் கூறுவதால் பஞ்சமரபு என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்நூல் 241 வெண்பாக்களால் யாக்கப்பட்டுள்ளது. இந்நூலின் காலப் பழைமையினால் பல இடைச்செருகல் பாடல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர். நூல் தொடக்கத்தில் பாயிரம் இடம் பெற்றுள்ளது. பஞ்சமரபு இசை மரபு, வாச்சிய மரபு என இரு இரண்டு பெரும் பிரிவுகளாகவும் அவற்றுள் சிறுபிரிவுகளாகவும் அமைந்துள்ளது. பஞ்சமரபின் வெண்பாக்களில் ஒலியின் தோற்றம்,இசைக்கு ஐம்பூதங்களின் இன்றியமையாமை,காற்றின் வகைகள்,பத்து நாடிகள்,பூதங்களின் பரிணாமம்., ஆளத்தி (ஆலாபனை), வட்டப்பாலைக்கு மண்டிலம் அமைத்தல், பன்னிரண்டு இராசி வீடுகள் பற்றிய செய்திகள் உள்ளன. இசைக்கருவிகள் பற்றிய விரிவான குறிப்புகள் உள்ளன. பஞ்சமரபு இசை ஆடலுக்குரிய இலக்கண நூலாகத் திகழ்கிறது. இலக்கியத்தினின்று எடுப்பது இலக்கணம் என்ற வகையில் ஆடல் இலக்கிய மரபுகளைத் தொகுத்தளிக்கும் இலக்கண நூலாக விளங்குகிறது. சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார், அரும்பத உரையாசிரியர் இருவரும் எழுதிய உரைகளில் மேற்கோளாகக் காட்டும் நூல்களுள் பஞ்சமரபு குறிப்பிடத் தக்கது.
வெண்பாவுக்குரிய செப்பலோசையில் பஞ்சமரபு நூலுக்கு முனைவர் ரமணி ஒலிவடிவம் தந்துள்ளார்.
Original: $7.20
-65%$7.20
$2.52Product Information
Product Information
Shipping & Returns
Shipping & Returns
Description
பஞ்சமரபு (ஐந்தொகை) வெண்பாக்களால் அமைந்த ஓர் இசைத்தமிழ் நூல். சேறை அறிவனாரால் இயற்றப்பட்டது. பழந்தமிழ் இசை மற்றும் நாட்டிய/நாடக இலக்கண நூல். சிலப்பதிகாரத்தின் உரைகளில் இந்நூலின் பல பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. பஞ்சமரபு இசை, வாக்கியம், தாளம், நிருத்தம், அவிநயம் ஆகிய ஐந்து பொருள்களின் மரபைக் கூறுவதால் பஞ்சமரபு என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்நூல் 241 வெண்பாக்களால் யாக்கப்பட்டுள்ளது. இந்நூலின் காலப் பழைமையினால் பல இடைச்செருகல் பாடல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர். நூல் தொடக்கத்தில் பாயிரம் இடம் பெற்றுள்ளது. பஞ்சமரபு இசை மரபு, வாச்சிய மரபு என இரு இரண்டு பெரும் பிரிவுகளாகவும் அவற்றுள் சிறுபிரிவுகளாகவும் அமைந்துள்ளது. பஞ்சமரபின் வெண்பாக்களில் ஒலியின் தோற்றம்,இசைக்கு ஐம்பூதங்களின் இன்றியமையாமை,காற்றின் வகைகள்,பத்து நாடிகள்,பூதங்களின் பரிணாமம்., ஆளத்தி (ஆலாபனை), வட்டப்பாலைக்கு மண்டிலம் அமைத்தல், பன்னிரண்டு இராசி வீடுகள் பற்றிய செய்திகள் உள்ளன. இசைக்கருவிகள் பற்றிய விரிவான குறிப்புகள் உள்ளன. பஞ்சமரபு இசை ஆடலுக்குரிய இலக்கண நூலாகத் திகழ்கிறது. இலக்கியத்தினின்று எடுப்பது இலக்கணம் என்ற வகையில் ஆடல் இலக்கிய மரபுகளைத் தொகுத்தளிக்கும் இலக்கண நூலாக விளங்குகிறது. சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார், அரும்பத உரையாசிரியர் இருவரும் எழுதிய உரைகளில் மேற்கோளாகக் காட்டும் நூல்களுள் பஞ்சமரபு குறிப்பிடத் தக்கது.
வெண்பாவுக்குரிய செப்பலோசையில் பஞ்சமரபு நூலுக்கு முனைவர் ரமணி ஒலிவடிவம் தந்துள்ளார்.











